கும்பகோணம், ஏப். 06 –

கும்பகோணம் அருகாமையில் உள்ள ஆடுதுறை விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மூர்;த்தி, தலம், தீர்;த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்றது, தேவாரம் பாடிய மூவராலும், வாணர வேந்தன் வாலியாலும் வழிபடப்பட்ட புண்ணிய தலமும் ஆகும். இத்தகைய பெருமைக்குரிய தலத்திற்கு கும்பாபிஷேகம் செய்திட  திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 04ம் தேதி திங்கட்கிழமை முதல் கால யாக பூஜைகள், கணபதி ஹோமம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவற்றுடன் தொடங்கி, இன்று, 4ம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹ_தியும், மகா தீபாராதனையும் நடைபெற்ற பின், மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து ரோகிணி நட்சத்திரம், மிதுன லக்னத்தில் மகா கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்கு, மகா அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here