பூண்டி, ஏப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …

பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியா கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இரு சக்கர வாகன பேரணி நடைப்பெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிபூண்டி சட்ட மன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளரும் பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் வழக்கறிஞருமான தில்லைகுமார் தலைமையில் கை சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு இருசக்கர வாகன பேரணியில் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.இரு சக்கர வாகன பேரணியில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் பங்கு பெற்றனர். பூண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட  காசிரெட்டிபேட்டை, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம் மெய்யூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் அப் பேரணி சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டது..

மேலும் அப்பேரணியில் ஒன்றிய துணை செயலாளர்கள் பால்சுதாகர் சித்ராபாபு பாபு  சுரேஷ்  மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடாதிரி ஸ்ரீராமு குப்பன், மாவட்ட ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் விஜயன் ராமராவ் ரஞ்சித் எட்வர்ட்துரை யுகேந்தர் உட்பட பலரும் பங்கேற்று வாக்கு சேகரித்தனார். இதில் 50க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here