சீர்காழி, மே. 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அந்நேரத்தில் அவரது 3 வயது மகன் அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த தெருநாய் சிறுவனை கடித்துள்ளது. அதில் சிறுவனுக்கு வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் கேட்டு ஓடி வந்த ஞானசேகரன் குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here