ஆரணி, மே. 29 –

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  ஆரணி பேரூர் இளைஞர் அணி சார்பில் இரண்டு ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் ஆரணி பஜார் வீதியில் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று ஆரணி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆரணி பேரூராட்சி செயலாளர் முத்து,  மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன்,  உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுகவின் தலைமை கழக பேச்சாளர் மதுரை சேவியர் , டிஜே.எஸ்.மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டு ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் ஈராண்டு ஆட்சியில், கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து தாய்மார்கள் மற்றும் பெண் வியாபாரிகள் இலவச பேருந்து மூலமாக கோயம்பேடு வரை சென்று வியாபாரம் செய்து வருவதால் அவர்களுக்கு போக்குவரத்து பயணச் செலவு மிச்சமாகி அவர்களின் குடும்ப வருமானம் மேம்படுவதாகவும், அதனால் அத்தாய்மார்களின் நெஞ்சங்களில் முதலமைச்சருக்கு பெரிய மரியாதை கலந்த நன்றி உணர்வு இரிப்பதாகவும் அப்போது தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பகலவன்,பா.செ.குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here