கும்பகோணம், அக். 10 –

கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 54வது பிறந்த நாளை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் மடத்துத்தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பசுமைத்தாயகம் மாவட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமையில் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு ரூபாய் 25000 கல்வி உதவித் தொகையை பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், ஒன்றிய செயலாளர், ஒன்றிய தலைவர் துரைராஜ் தமிழரசன், உழவர் பேரியக்க மாநில செயலாளர் ஆலயமணி, மாநில பொறுப்பாளர் மண்டப கலியமூர்த்தி, பசுமைத் தாயகம் மாவட்ட தலைவர் ராஜன், மாவட்ட துணைச் செயலாளர் குரு, மாவட்ட துணை தலைவர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், 154 மரக்கன்றுகள் வழங்கினார்கள். அதனை தொடர்ந்து ஒன்றியம் சார்பில் காளிமுத்து நகரில் கட்சி கொடியேற்றி வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here