கும்பகோணம், பிப். 28 –
கும்பகோணம் அருகே உள்ள அரியத்திடல் கிராமத்தில் ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பிளஸ் ஒன் பள்ளி மாணவன், நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஓடும் பேரூந்தில் மாணவன் ஏற முயன்று நிலைதடுமாறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் அருகே உள்ள அரியம் எனும் கிராமத்தில் நடந்துள்ளது. இவ்விபத்துக் குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் பலியான சம்பவம் இன்று அரியதிடல் மற்றும் பூக்கொல்லை பகுதியில் பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தில், உள்ள கற்பகம் நகரில் வசிக்கும், மறைந்த அமானுல்லா மகன் முகமது ஆதில் (16), கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறான், இந்நிலையில், இன்று காலை, பள்ளிக்கு செல்ல இருந்த நிலையில், அவ்வழியே, நகர பேருந்து எண் : 20 நரசிம்மபுரத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த போது, ஓடும் பேருந்தில், முகமது ஆதில் ஏற முயன்ற போது, எதிர்பாராவிதமாக, தடுமாறி சாலையில் தவறி விழுந்ததில், அவன் படுகாயமுற்றான், இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பக்கிரிசாமி சமயோசிதமாக செயல்பட்டு, பயணிகளை இறக்கி விட்டு படுகாயமுற்ற முகமது ஆதிலை பேருந்திலேயே அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார், இருப்பினும் மாணவன் முகமது ஆதில் பரிதாபமாக உயிரிழந்தான் இச்சம்பவம் பூக்கொல்லை, அரியதிடல் பகுதியில் பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் தற்போது மாணவனின் உடல், உடற்கூறு ஆய்விற்காக, அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.