கும்பகோணம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, சென்னையில் நடைபெறும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோடம் மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி சென்னையில் நடைபெறும் பட்டினி போரை ஆதரித்து இளைஞர் அரண் மற்றும் மக்கள் சனநாயக குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சார்பில் காந்தி பூங்கா முன்பு மாணவர் அரண் கார்த்தி தலைமையில் நடைபெற்றது.
அவ் ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அரண் சிவன்ராஜ், மக்கள் சனநாயக குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் இராகவேந்தர், இளைஞர் அரண் சரவணன், இளைஞர் அரண் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சைமன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.