திருவாரூர், மார்ச். 14 –

திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில், நேற்று திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சின் நகர அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைத்தரவுள்ளார்.

மேலும் அப்பகுதியில் அரசு விழாவாக நடைப்பெறவுள்ள வடுவூர் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து காட்டூரில் உள்ள மற்றும் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதன் பின்னர் திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு செல்கிறார்.

எனவே தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் என திரளானோர் இவ் நிகழ்வுகளில் கலந்து கொண்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் பதவிநேற்றப்பின் முதன் முறையாக வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பளித்து அவரை வரவேற்க வேண்டும் என திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் மற்றும் நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் ஏறாளமானோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here