மீஞ்சூர், டிச. 10 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாஜக மாநில பட்டியிலின அணித் துணைத்தலைவர் அன்பாலயா எஸ். சிவக்குமாரின் மருமகள் நிவேதா பிரதீப் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதில் மீஞ்சூரையடுத்த அத்திப்பட்டு வட்டாரத்தில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 1001 நபர்களுக்கு, வெள்ள நிவராண தொகுப்பினை அன்பாலயா சிவக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் அத்திப்பட்டு வட்டாரத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள மலைவாழ்மக்கள் மற்றும் பொதுமக்களென 1001 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவராண தொகுப்புகள் வழங்கப்பட்டது.
இதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தடா பெரியசாமி, பி.ஆர். பாண்டியன், எம்.பாஸ்கரன், நடிகர் பிரபுதாஸ், சிவகோகுலகிருஷ்ணன், உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நிவாரணம் வாங்க வருகை புரிந்தவர்களை அமர வைத்து அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.