சென்னை:

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டத்தை ஆளுநர் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வி.சரோஜா, ஜெயவர்தன் எம்பி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முதலில் 1000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அடுத்த 2 மாதங்களில் 5000 மாணவர்களுக்கும், வரும் கல்வியாண்டில் 20 ஆயிரம் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here