கோட்டூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகேவுள்ள பைங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் நெருஞ்சனக்குடி கிராமத்திலிருந்த டாட்டா ஏசி வாகனத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கோட்டூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது மின் கம்பியில் உரசி தீ பிடித்த நிலையில் வந்ததாக கூறப்படுகிறது .
அந்த வழியாக சென்றவர்கள் தீப்பிடித்து எரிவதாக கூறியவுடன் டாட்டா ஏசி வாகனத்தை கோட்டூர் அருகே நிறுத்தி விட்டு வைக்கோலை சரி செய்த போது அருகில் இருந்த ஐயப்பன் என்பவர் அவரது நண்பர் வீட்டில் இருந்து இரவல் வாங்கி வந்து தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் மீதும் தீ பரவி பற்றியது மேலும் வைக்கோல் சரிந்து விழுந்ததில் கார் மற்றும் டாட்டா ஏசி வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது .தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டூர் தீயணைப்புதுறை அதிகாரிகள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்பு டாட்டா ஏசி வாகனம் மற்றும் கார் முழுமையும் எரிந்து சேதமடைந்துள்ளது. சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















