பொன்னேரி, நவ. 30 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியின் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
அக்கூட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் கனமழை குறித்து மழை நீரை வெளியேற்றுதல், நீர் போக்குவரத்து வழித்தடங்களை சீரமைத்தல், வணிகப் பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தல், மின் விளக்கு, குடிநீர், உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நல்லசிவம், பத்மாவதி, உமாபதி உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.