ஆரணி, ஏப். 27 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் கவுன்சிலர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் பேரூராட்சி மன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமாரன். செயல் அலுவலர் கலாதரன். நியமனக் குழு உறுப்பினரும் முன்னாள் திமுக நகர செயலாளர் கண்ணதாசன். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் .இதில் சாந்தாகுண பூபதி ..குமார். பொன்னரசி நிலவழகன். பிரபாவதி சேஷாத்திரி .ரகுமான்கான். உள்ளிட்ட13 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், அதுப்போன்று .ஆரணி பேரூராட்சிக்கு பேருந்து நிலையம் அமைக்கவும், மேலும் .நகரத்தில் அமைந்துள்ள கடைகள் .சிறு கடைகள். உள்ளிட்டவைகளில் வரிவசூல் செய்வது குறித்து ஆலோசனை செய்து முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் யுவராஜ். முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




















