திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு, குறு வணிகர்களுக்கான கட்டணமின்றி ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கைக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப்படம் இரமேஷ்
திருவண்ணாமலை, ஆக.20-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு, குறு வணிகர்களுக்கான கட்டணமின்றி ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கையினை ஊக்கப்படுத்தும் விதமாக நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி மற்றும் வணிக வரித்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவிலேயே முதன் முதலாகத் தமிழ் நாட்டில்தான் வணிகப் பெருமக்களின் நலனுக்காக “தமிழ் நாடு வணிகர் நல வாரியம்” என்ற அமைப்பு 25.09.1989 நாளிலிருந்து சீரிய முறையில் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர, சேர்க்கைக் கட்டணத் தொகையான ரூ.500ஃ- வசூலிப்பதிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்களித்து ஆணையிட்டுள்ளார். இதன் பொருட்டு, 15.07.2021 முதல் 14.10.2021 வரையிலான காலத்திற்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் அனைத்து புதிய சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான சேர்ககை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக எந்த ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர், உறுப்பினர் ஆவதற்கு பதிவெண் அவசியமில்லை, வணிக உரிமம் இருந்தால் போதுமானது. வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கு இணையத்தில் விண்ணப் பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு உதவி திருவண்ணாமலை உதவி ஆணையர் (மாநிலவரி) – 04175–298381, 04175-298382 9790452385, 9443228655, ஆரணி மாநிலவரி அலுவலர் – 04173-226820, 9442390590, போளுர் மாநிலவரி அலுவலர் – 01481-222080, 9487348768, வந்தவாசி மாநிலவரி அலுவலர் – 01483-225013, 8825876329 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை துணை ஆணையர் (மாநிலவரி) முகமது அர்சத், உதவி இயக்குநர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.