திருவண்ணாமலை ஆக 1 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ.க்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விவரம் வருமாறு விடுப்பில் இருந்த அருணாச்சலம் திருவண்ணாமலை (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் இருந்த இந்திராணி ஆரணி (வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருவண்ணாமலை (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஜி.பழனி கீழ்பென்னாத்தூர் (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கீழ்பென்னாத்தூர் (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த பி.பி. முருகன், புதுப்பாளையம் கீழ்பென்னாத்தூர் (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், புதுப்பாளையத்தில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் (நிர்வாகம்) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) ஸ்ரீதர், பெரணமல்லூர் (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன் செங்கம் (வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றிய அண்ணாதுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கும் ஜவ்வாதுமலை (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ் ஆனந்த், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் செங்கம் (வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஜவ்வாதுமலை (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், துரிஞ்சாபுரம் (வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பி.மகாதேவன் தண்டராம்பட்டு (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றிய துரிஞ்சாபுரம்(கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.