நேற்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் சுரங்கப்பணி மேற் கொள்ளும் போது சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் பணியை மேற்கொள்ள அதற்கான நிலையான சுரங்க கொள்கையை உருவாக்க வேண்டும் எனக்கூறினார்.
சென்னை, ஜூலை,25-
இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சரங்கப்பணிகளை மேற் கொள்வது குறித்து நிலையான சுரங்க கொள்கையை உருவாக்க வேண்டும். என்ற அறிவுறுத்திய முதல்வர் செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்ஙுப் படுத்த புதாய கொள்கையை உருவாக்குவது குறித்தும் , கனிம வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். மேலும் பயன்பாட்டில் இல்லாத குவாரிகளை கண்டறிந்து வாய்ப்புள்ள இடங்களில் அக்குவாரிகளை மழைநீர் சேகரிப்புக்களாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குப் பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயன்றஃற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செந்து பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விழுப்புரம் மாவட்ட வானூர் வட்டம் திருவக்கரை கிராமத்தில் 2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரப் படிமங்கள் மற்றும் திருச்சி பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லூயிர்ப் படிமங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.
புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி குவாரி குத்தகை உரிம ம் மற்றும் நடைச்சீட்ட வழங்கும் வரை சுரங்க நிர்வாகத்தில் மின்னணு சேவை முறையை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு கனிம நிறுவனம் அடுத்த ஹந்தாண்டுகளில் ரூ.250 கோடி அளவிற்கு வருவாயினை உயர்த் முயற்சி மேற் கொள்ள வேண்டுமெனவும் சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கு உரிய தொழிற் நுட்ப முறை குறித்து ஆய்வு மேற் கொள்ளவும் , அரக்கோணம் அருகில் செயற்கை மணலைத் தயாரிக்க புதிய உற்பத்திப் பிரிவு தொடங்கவும் செயல் திட்டங்களை உருவாக்க முதல்வர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சரங்கப் பகுதிகளை அடுத்த மூன்று வருடத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உலகத்தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் , தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில் துறை சிறப்பு செயலாளர் லில்லி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல் ராஜ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கதிரவன், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் பிருந்தா தேவி, மற்றம் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.