கும்பகோணம், டிச. 02 –

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் திமுக கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான மறைந்த கோசி மணியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோசி மணி திரு உருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறையைச் சேர்ந்த மறைந்த முன்னாள் உள்ளாட்சித் துறை கூட்டுறவுத்துறை அமைச்சர் கோசி மணியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஆடுதுறையில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆடுதுறை பேரூராட்சி செயலாளர் கோசி இளங்கோவன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள கோ.சி மணி மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை, திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் சுந்தர.ஜெயபால், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர்  சுபா திருநாவுக்கரசு, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here