கும்பகோணம், டிச. 25 –
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கும்பகோணம் நகர அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று, எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரத்தில், தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை 10 வருடங்களும் ஆட்சி செய்து மக்கள் மனதில் பெரிய இடத்தினை பெற்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆர் என்றால் அது மிகையாகாது, மேலும் அதிமுக என்னும் கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று. அதிமுக சார்பில் காந்தி பூங்காவில் இருந்து மாவட்ட செயலாளர் பாரதிமோகன், தலைமையில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கும்பேஸ்வரன் கோவில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் மாநகர செயலாளர் ராம ராமநாதன், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் ஏவிகே அசோக்குமார், கைத்தறி பிரிவு மாநில செயலாளர் கே.ஜி லெனின், ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், முத்துகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர்கள் பத்ம குமரேசன், ராஜி, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், பாசறை மாநகர தலைவர் ஏ.ஜி. ரவி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் கவிதா ஸ்ரீதர், மாநகர செயலாளர் பூமொழி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.