மீஞ்சூர், ஏப். 14 –

மீஞ்சூரில் சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள்விழா .தொழிலதிபர் தமிழ்உதயன்  தலைமையில் கொண்டாடப் பட்டது.

அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு. மீஞ்சூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலக்குழு மன்ற மாளிகையில் மேல் புறத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மீஞ்சூர் வட்டார தொழிலதிபரும் திமுகவின் முன்னாள் அமைச்சர் க. சுந்தரத்தின் மகன் தமிழ்உதயன் தலைமையில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர் . வார்டு உறுப்பினர்கள் சுமதி .ரஜினி. உள்ளிட்ட திமுக வார்டு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். .அதே போன்று மீஞ்சூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர். பெரியார் .அண்ணா. உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவச்சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

மேலும் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மீஞ்சூர் வட்டாரத்தில் ஆதிதிராவிட நலக்குழு சார்பில் அம்பேத்கர் புகழை பறைசாற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here