புதுச்சேரி, மே.08 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரி, ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார் மேலும் இவரது மனைவி தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு சூர்யா(20) என்ற மகன் உள்ளார், 9ஆம் வகுப்பு வரை படித்த சூர்யா வேலை இல்லாமல் உள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டின் அருகே ஜுப்மர் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் உள்ள 30-அடி ஆழமுள்ள கிணற்றில் நண்பர்கள் 5-பேருடன் குளிக்க சென்றுள்ளான். அப்போது நீச்சல் தெரியாத சூர்யா கிணற்றில் குதித்த போது மீண்டும் மேலே வரவில்லை அதனால் உடன் குளித்த நண்பர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் உடனடியாக சேதராப்பட்டு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3-மணி நேரத்திற்கும் மேலாக தேடி சூர்யாவின் உடலை கண்டு பிடித்தனர். பின்னர் உடலை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சூர்யாவின் தந்தை திருநாவுக்கரசு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here