மீஞ்சூர், ஜூன். 29 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் இன்று உலக கைம் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சமூக சேவைச் சங்கம் மற்றும் மீஞ்சூர் பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பெண்கள் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம். அவ்வூராட்சி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இக்கூட்டத்திற்கு சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் எம்.வி. ஜேக்கப், அருட்செல்வி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பெண்கள் யாரையும் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக சுய மரியாதையுடன் வாழ்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தொழில் முனைவதற்கான தகுந்த பயிற்சிகளும், நல திட்ட உதவிகளையும் அம்மகளிருக்கு வழங்கினார்கள். மேலும் இவ்விழிப்புணர்வு பயிற்சி கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், உள்ளிட்ட ஜெயந்தி, ஜோதிபாசு, செல்வி ,ஹாஜா மொய்தீன் ,தனசேகர், ஆகிய தன்னார்வலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் இதில் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here