தஞ்சாவூர், ஜன. 14 –
தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் விவேகானந்தரின் 161- வது பிறந்தநாள் விழா அச்சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது .
முன்னதாக சங்க செயலாளர் தங்க. கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். உலக திருக்குறள் மைய துணை தலைவர் குருசாமி, உட்பட பலர் கலந்து கொண்டு விவேகானந்தரின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
மேலும் இவ்விழாவில் பெண்களுக்கான ரங்கோலி கோலப்போட்டி, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கண்ணன் சிறப்பாக ரங்கோலி கோலம் போட்ட பெண்களுக்கு நினைவு பரிசு மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
மேலும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்க களப்பணியாளர்கள், புனிதா, செல்வி,மணி. ராதிகா, லெட்சுமி, லீமா ரோஸ் மற்றும் ஊழியர்கள் பலர் செய்து இருந்தனர். நிறைவாக, விவேகானந்தா சமூக கல்விசங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி உரை நிகழ்த்தினார்.