தஞ்சாவூர், மார்ச். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம்,  வீரசிங்கம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு.மாரியம்மன் திருக்கோவிலின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

திருச் சேற்றுத்துறையில் இருந்து யானை மீது முளைப்பாரி வைக்கப்பட்டு, தப்பாட்ட இசையுடன் கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

அப்போது வழி நெடுக ஒவ்வொரு வீட்டிலும் முளைப்பாரி கலசம் எடுத்து வந்தவர்களுக்கு பாதபூஜை செய்து. தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து பூக்கூடை ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூக்களை கொண்டு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here