ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தவர் ஜெகதீசன் (வயது 35). இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான் குளத்தை அடுத்த சோலையார்புரம் கிராமம் ஆகும்.

இவர் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அண்ணாசிலை அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சமையல் கியாஸ் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார். ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரை தேடி வருகிறார்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள சாலாபுரம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகேந்திரன் (வயது33). இவர் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மீது ஏறிய போது தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த சுகேந்திரன் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here