பொன்னேரி, மார்ச். 18 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் அதில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 30 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த முருகன், சுகுமார் என்பதும் இவர்கள் சென்னை திருவொற்றியூரில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியையும், கைது செய்யப்பட்டவர்களை திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here