திருச்சி, ஏப். 08 –

திருச்சி லால்குடி தாலூகா கல்லக்குடியில் வசிக்கும் நடராசன் என்பவரின் மனைவி தனது கணவரின் பெயரில் உள்ள பட்டாவில் திருத்தம் செய்வதற்கும் மேலும் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ள சர்வே எண் திருத்தம் செய்வதற்கும் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா அலுவலகத்தில் மனு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் அம்மனுவை பரிசீலனை செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள மண்டல துணை தாசில்தார் பிரபாகரன் மற்றும் முத்துவாதூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர் அவரிடம் ரூ 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுத்து அவ்வேளையை முடிக்க விருப்பமில்லாத ஜெயாநடராஜன் திருச்சி பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்டையில் லஞ்ச தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் கடந்த 6 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் பிடிப்பதற்கான பொறிவைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது புல்லம்பாடி மண்டல துணை தாசில்தார் பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகிய இருவரும் கையூட்டாக ரூ. 10 ஆயிரத்தைப் பெறும்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here