திருவாரூர், ஏப். 14 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருவேறு பகுதியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்றார்.
முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச்செயலாளருமான பூண்டி கே கலைவாணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் போது, திருவாரூர் நகர செயலாளர் வாரை பிரகாஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் டி செந்தில் நகர மன்ற உறுப்பினர் ரஜினி ஜின்னா வரதராஜன் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் மாவட்ட ஊராட்சி துணை பெருந்தலைவர் சேகர் என்கின்ற கலியபெருமாள் இரா சங்கர் ரோட்டரி சங்க நிர்வாகி ராஜ் என்கின்ற கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகளும் திரளான திமுக தொண்டர்களும் உடனிருந்தனர்.
மேலும், அதனைத் தொடர்ந்து, திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 30 வது வார்டில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் அக்கடையினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது, நகரச்செயலாளர் வாரை. எஸ் பிரகாஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் D.செந்தில், நகர மன்ற உறுப்பினர் சோலை புருசோத்தமன் மற்றும் நகர உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானவர்கள் கலந்துக்கொண்டனர்.