திருவண்ணாமலை ஜன.28 –

திருவண்ணாமலையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உத்தரவுகளை வழங்கினார்.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு திருவண்ணாமலை கர்மேல் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. அதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 16 பேருக்கு ஆன்லைன் மூலம் பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. அதற்கான உத்தரவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் வழங்கினார்.

  அப்போது மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி அரவிந்தன் நளினி தயாளன் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்ககளுக்கான கலந்தாய்வு இணையதள சர்வரில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தாமதமானது இந்நிலையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்ககளுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு அட்டவணை அடிப்படையில் அடுத்த மாதம் 18ந் தேதி வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here