திருவாரூர், பிப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.  சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா தொடக்கமாக இன்று காலை ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் உள்ள கொடியேற்ற உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து மூலவர் ஸ்ரீவன்மீகநாதர் சன்னதி எதிரே வந்தப்பின் 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தின் பீடத்தினை சுற்றியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பால், சந்தனம் முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ரிஷபம் படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் பங்குனி உத்திரப் பெருவிழா துவக்கத்தை அறிவிக்கும் வகையில்  கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. மேலும் அத் திருவிழாவின் முக்கிய விழாவான வரும்  மார்ச் 21ம்  தேதி உலக புகழ்பெற்ற ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.  அதனைத் தொடர்ந்து மார்ச் 24ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரியும், மார்ச் 25ம் தேதி பாத தரிசனமும் நடைபெறுகிறது. இன்று காலை நடைப்பெற்ற  கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here