திருவள்ளூர், செப் . 04 –

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர்,  மதுரவாயல், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டங்களை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர்,எண் : 55/88, சித்தி விநாயகர் கோவில் தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர் – 602001, தொலைபேசி எண் : 044- 27665160 என்ற முகவரியில் உள்ள அலுவகத்தில் உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

 

அதே போல் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், மாதவரம் ஆகிய  வட்டங்களை சேர்ந்தவர்கள் பொன்னேரி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர், எண் : 61, தச்சூர் ரோடு,  கிருஷ்ணாபுரம், பொன்னேரி – 601204, தொலைபேசி எண் : 044- 27972221 என்ற முகவரியில் உள்ள அலுவகத்தில் உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும் என திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) எஸ்.சுதா மற்றும் பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் பு. இராமகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here