மீஞ்சூர், ஜூன் 01 –
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி, ஊரணம்பேடு கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கான புதிய பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் கோபி தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பள்ளிக் கட்ட டத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் காமராஜர் துறைமுக நிறுவன சமுதாய மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து 18. 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் இப் பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி பிரகாஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேஷ், சிறுவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாளையம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.