திருவேற்காடு, மார்ச். 25 –

சென்னையை அடுத்த திருவேற்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோலடியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அத்துடன் இணைந்து தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் இதில் முனிராஜ் (29), முனி செல்வம் (24), ஆகிய இருவரும் டாஸ்மாக் பாரில் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்த வந்த நபர் ஒருவர் மது அருந்திவிட்டு முனிராஜ்க்கு ரூ.100ஐ டிப்ஸ் ஆக கொடுத்து விட்டு இருவரையும் பிரித்து கொள்ளுமாறு கூறி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் டிப்ஸ் பணத்தில் முழுவதும் முனிராஜ் குடித்துவிட்டு முனிசெல்வத்திற்கு பணம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முனி செல்வம், போதையில் வந்த முனிராஜை சரமாரியாக தாக்கியுள்ளார் அப்போது அதே பாரில் வேலை செய்யும் சுரேஷ் என்பவர் அவர்கள் இருவரையும் அடித்து சண்டையை விலக்கி விட்டுள்ளார். அப்போது முனிராஜ் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார். போதையில் விழுந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர் காலையில் எழுந்து பார்த்த போது முனிராஜ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார் கொலை செய்யப்பட்ட முனிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முனி செல்வம் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். நூறு ரூபாய் பணத்துக்காக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here