திருவாரூர், ஜூன். 04 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதியில் அதிமுகவின் செயல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.. முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
முன்னதாக அலுவலகத்தின் முன்பாக அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய செயலாளர் சிறுகுடி ராஜேந்திரன், குடவாசல் ஒன்றிய பெருந்தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் எம். ஆர். சண்முகம், நகர செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.