மயிலாடுதுறை, பிப். 28-

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜகவை கண்டித்து நடைப்பெறும் பொதுக்கூட்டம் இன்று மாலை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன்  தலைமையிலும், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெறுகிறது.

மேலும் அக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை குழு தலைவருமான  திருச்சி சிவா, மற்றும் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில் அக்கூட்டத்திற்கான விளம்பர  தட்டிகள் சீர்காழி நகரில் தென்பாதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கொள்ளிடம் முக்கட்டு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மக்கள் அதிகம் கூடும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

அதில் திருச்சி சிவா பெயருக்கு முன்பு திரு என போடுவதற்கு பதிலாக திருமதி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவ்விளம்பர தட்டிகளை பார்க்கும் பொதுமக்களும், திமுக தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் அக்கட்சியின் நிர்வாகிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது கோபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்..

மேலும் பொதுமக்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியை காப்பதே தாங்கள்தான் என மார்தட்டிக் கொள்ளும் அவர்கள், தாங்கள் வைத்துள்ள திமுகவின் விளம்பர தட்டிப் பலகையில் பிழை உள்ளதை கூட கவனிக்க காட ஆள் இல்லையா எனவும் அவர்கள் தலைவர்களே அவர்களே மதிப்பிழக்க செய்தவதும் முறையோ என நகைக்கின்றனர். மேலும் அதனை சமூக வலைத் தளங்களிலும் வைரலாக்கி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here