கும்பகோணம், மே. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் …

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சி, வேளாக்குடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழா நடைபெற்றதால் தெருவாசிகள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று குடியிருப்பு அருகே இருந்த மூங்கில் கொல்லையில் காற்று உராய்வினால் ஏற்பட்ட தீ பற்றி எரிந்து தீ கங்குகள் காற்றில் பறந்து அருகே இருந்த குடிசை வீட்டின் கூரைகளில் பற்றி எரிந்தது.

அப்போது அத்தெருவில் இருந்த இளைஞர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவியதில் ஸ்ரீதர் (39), கனகா (34) மற்றும் ராஜாமணி (65) ஆகியோரின் 3 வீடுகளும் தீயில் கருகி முற்றிலும் எரிந்து சாம்பலானது.

மேலும் அத்தகவலறிந்து கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். அதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம்,  புத்தகங்கள், பட்டுப் புடவைகள், பள்ளி கல்லூரிகளில் கல்விப் பயிலும் மாணாக்கர்களின் சான்றிதழ்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் உட்பட அனைத்தும்அவ்விபத்தில் எரிந்து சேதமானது. அவ்விபத்துக் குறித்து சுவாமிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here