மீஞ்சூர், ஏப். 23 –
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு, மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் பேரணியாகச் சென்று நாலூரில் அமைந்துள்ள அதிமுகவின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையிலும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் நகர அதிமுக செயலாளர் வி.பட்டாபிராமன், வழக்கறிஞர் மாரி, தேவதானம் நாகராஜ், குணசேகரன், லாரன்ஸ், ஜெயராமன், தீனதயாளன், வாசுதேவன், கணேசன், உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.