திருவள்ளூர், மார்ச். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு  46 விழுக்காடில் இருந்து 50 விழுக்காடாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன் நன்றியை தெரிவித்துள்ளார்.

சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியமாக 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தி ஒரு முத்தான அறிப்பை தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாகவும், எப்போதெல்லாம் ஒன்றிய அரசு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதே தேதியில் வழங்குவேன் என்ற உத்தரவாத்தை அளித்து வருவதாகவும், மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட ஆண்டு கால கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழ் நாட்டின் முதன்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here