தஞ்சாவூர், மே. 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

கோடை கால சிறப்பு பயிற்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சையின புகழ்பெற்ற தஞ்சை ஓவியம், கலம்காரி ஓவியம், தஞ்சை கண்ணாடி ஓவியம் வரைதல் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளன. ஒரு வாரம் நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்பில் சிலை வடிவமைத்தல், ஓவியம். கலைத்தட்டுகள் என தஞ்சையில் புகழ்பெற்ற கலைப் பொருட்கள் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சை ஓவியம், கலம் காரி ஓவியம், தஞ்சை கண்ணாடி ஓவியம் தீட்டுதல் குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது ஏராளமானவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓவியம் தீட்டி கற்றுக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here