புதுச்சேரி, மே. 07-

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால் – பச்சையம்மாள் ஆகியோரின் மகள் மேனகா +2 தேர்வில் வெற்றிப் பெற்ற நிலையில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். அதனால் மனமுடைந்து சோகமாக மேனகா காணப்பட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதனையடுத்து அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here