திருவேற்காடு, மே. 09 –
சென்னை அடுத்துள்ள திருவேற்காட்டில் பிரபலமான சிவனடியாராக வாழ்ந்து வந்தவர் திருவேற்காடு அடிகளார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் இவர் உடல்நிலை குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
திருவேற்காட்டில் பிரபல சாமியாரான இவர் தீவிர சிவனடியார் ஆவார் தற்போது இவர் உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருவேற்காட்டைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிவன் பக்தர்கள் இவருக்கு கண்ணீர் மல்க தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இவருடைய மறைவு திருவேற்காட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..