பொன்னேரி, மார்ச். 26 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 82 ஆயிரம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைப்பெற்று வருவாதகவும், இப்பணி வரும் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும், அதற்கான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும், நகராட்சியில் உள்ள 27  வார்டுகளிலும் திட்டத்தை விரிவுபடுத்த பரிந்துரை செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது பொன்னேரி.நகராட்சி ஆணையர் தனலட்சுமி நகராட்சித் தலைவர் பரிமளம்   விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நகர மன்ற வார்டு உறுப்பினர் உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here