காஞ்சிபுரம், நவ. 1 –

காஞ்சிபுரத்தில் ஓய்வுப்பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் கொண்டாடினார்கள். அவ்வாசிரியை அவ்வயதிலும் இறுதிவரை அமர்ந்து அனைவருக்கும் ஆசி வழங்கியது, விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஜாஸ்வா. இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற அவில்தர் பிரிவு ராணுவ வீரர் ஆவார். பணி நிறைவு பெற்ற அவர், காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆந்திர சன் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், புதுவாயல் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியவதி என்பவரை திருமணம் செய்து கொண்டு காஞ்சியில் வசித்து வந்தார்.

திருமதி பாக்கியவதி டேவிட் 1952 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சியின் கீழ் இயங்கும் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து 40 ஆண்டுகால ஆசிரியர் பணியில் அனைத்து மதப் பிரிவுகளை சார்ந்த குழந்தைகளுக்கும் தனது குழந்தை போல் பாவித்து அவர்கள் அனைவருக்கும் கல்வியை கற்பித்தும், நல்லொழுக்கத்துடனும் உருவாக்கியுள்ளார்.

இவருக்கு ஒரு மகள் இரண்டு மகன் என்று வாழ்ந்து வந்த நிலையில் அவரது கணவர் மரணத்திற்கு பின்பு தனது குழந்தைகளுடன் இன்று வரை வசித்து வருகிறார். தற்போது அவருக்கு நூறு வயது ஆரம்பிப்பதையொட்டி அவருக்கு பிறந்தநாள் விழா நடத்த அவரது மகள் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்து நேற்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் காலை பாக்கியவதிடேவிட் அவர்களின் நூறாவது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மேடையில் 100 வயதை ஆரம்பிக்கும் நாளை ஒட்டிய கேக்கினை வெட்டி அனைவருக்கும் அவர் வழங்கினார்.

தொடர்ந்து, அவரிடம் கல்வி பயின்று தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்கள்,  பொறியாளர்கள்,  கல்லூரி விரிவுரையாளர்கள், குடும்பத்தினர் என பலர் அவருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த வயதிலும் சற்றும் உடல் மற்றும் உள்ளம் தளராது அமர்ந்து அனைவருக்கும் நல்லாசி வழங்கிய அவரின் உடல் வலிமை மற்றும் செயலை அனைவரும் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.

ஆசிரியை பாக்யதேவிடேவிட் குறித்து விழாவில் பங்கேற்ற அனைவரும் பாராட்டி புகழார உரை நிகழ்த்தினார்கள். மேலும் ஆசிரியர் பாக்கியதேவிடேவிட் அவர்களின் கடந்த கால புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவரின் வயதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here