இராமநாதபுரத்தில் எல்.ஐ.சியின் 66 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இராமநாதபுரம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், செப். 1-
இன்சூரன்ஸ் வார விழா 66வது எல்ஐசி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் எல்.ஐ.சி கிளையில் இந்திய சீன எல்லையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி அவர்களின் மணைவி வானதி குத்துவிளக்கு ஏற்றி இன்சூரன்ஸ் வார விழாவை துவக்கி வைத்தார்.
இவ் விழாவிற்கு வந்தவர்களை ராமேஸ்வரம் சிறப்பு அதிகாரி கிளை மேலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார்.
இவ்விழாவில் ராமநாதபுரம் முது நிலை கிளை மேலாளர் லட்சுமணன் சிறப்புரை ஆற்றும் பொழுது ராமநாதபுரம் கிளை மதுரை கோட்ட அளவில் வணிகத்திலும் சேவையிலும் சிறந்து விளங்குகிறது என்றும் இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழா கொண்டாடுவதால் இந்தப் பகுதி மக்களுக்கு இன்சூரன்சு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாகவும் கூறினார்.
ராமநாதபுரம் கிளை உதவி மேலாளர் சிவகுமார் நன்றி கூறினார். இவ்விழாவில் ஏராளமான பாலிசிதாரர்கள், முகவர்கள், அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர். இவ் விழாவிற்கான ஏற்பாட்டினை விற்பனை பிரிவு தலைவர் முத்துப்பாண்டி செய்திருந்தார்.