ஆர்.கே.பேட்டை, நவ. 12 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள 2 கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்ட ஏரி கடந்த அக் மாதல் வாரத்தில் இருந்து பெய்து வரும் வட கிழக்கு பருவமழையால் இவ் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
அவ் ஏரியின் கடைவாசல் பகுதியில் அதற்கு நன்றி அறிவித்தும், வரவேற்கும் விதத்தில் இயற்கைக்கும், இறைவனுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்து, தீபம் காட்டி விவசாயிகள் மற்றும் ஊர்மக்கள் வழிப்பட்டனர்.
வெகு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஏரி நிரம்பி வடிவதால், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதுகலத்துடன் மகிழ்ச்சியில் ஆர்பரித்து வருகின்றனர். மேலும் ஏரி பாசனத்தை நம்பி இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் பல ஏக்கர் நிலம் இந்தாண்டில் பலன் அடையும் என்று அவ்வூர் விவசாயிகள் மற்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் இந்தாண்டு இப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.