புதுச்சேரி, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் கடந்த வாரம் கஞ்சா விற்பனை தகராறில் பெரியார் நகரில் ரவுடியை கோயில் திருவிழாவில் ஒரு கும்பல் பட்டபகலில் வெட்டி கொன்றது. அதற்கு முந்தைய நாள் அரியாங்குப்பத்தில் ஒரு ரவுடி அடித்து கொலை செய்யப்பட்டார். ரவுடிகளுக்குள் நடக்கும் கேங்க் வாரால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அதனை ஒடுக்கும் வகையில் போலீசார் திடீரென ரவுடிகளின் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று அதிகாலையில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் வீடுகளில் போலீசார் அதிகாலையில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர்.
அவ்வகையில் பெரியார் நகர், கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரௌடிகளை காவல் கண்காணிப்பாளர் சைஜன்யா தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் அச்சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவர்கள் வீடுகளில் உள்ள பொருட்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இதில் எந்த பொருளும் சிக்கவில்லை. இருப்பினும் போலீசார் வெடி குண்டு, ஆயுதங்களை வீடுகளில் அனுமதிக்க கூடாது என ரவுடிகளின் குடும்பத்தாருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.