மாதவரம், ஜூலை. 07 –

மாதவரம் தொகுதிக்குட்பட்ட, புழல் ஒன்றியம், வடகரை ஊராட்சி சிவன் கோயில் அருகே அமைந்துள்ளது. மின்மாற்றி அதன் மின் கம்பங்கள் பெரிதும் சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்தது..

மேலும் அக்கம்பங்களால் ஏற்படயிருந்த ஆபத்தினை போக்கும் விதமாக விளாங்காடுபாக்கம் மின்வாரிய பொறியாளர் தனசேகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அம் மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து, மின்மாற்றிகளை மின் வாரிய ஊழியர்கள் துணையுடன் பொறுத்திடும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

மேலும், இப்பணியானது, சுமார் 7 மணி நேரத்திற்குள் விரைவாக மின்வாரிய ஊழியர்களால் செய்து முடிக்கப்பட்டது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின்கம்பங்களை மாற்றி தடையில்லா மின்சாரம் கிடைத்திடவும்  மற்றும் மின்விபத்துக்கள் நடக்கமாலும் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விளாங்காடுபாக்கம் உதவி மின் பொறியாளர் தனசேகரை அப்பகுதி மக்கள் வெகுச்சிறப்பான பாராட்டுக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் வைஷ்ணவி …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here