செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், செப் . 3 –
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்கள் ஆலயங்கள் மசூதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வருகிற 6 ம் தேதி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய ஏராளமானோர் கூடுவார்கள் என்பதாலும் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் செப்டம்பர் 6ஆம் தேதி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவோ அன்றைய தினம் ராமநாதசுவாமி கோயில்சுவாமி தரிசனம் செய்வதற்கோ அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா அறிவித்துள்ளார்.