பொன்னேரி, ஏப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தனர். இதுக் குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் முறையாக குறித்த நேரத்தில் பேருந்துகளை இயக்ககோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்து வந்த பொன்னேரி போலீசார் மாணவர்களை அணுகி பணிமனை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுத்து பேருந்துகளை குறித்த நேரத்தில் இப்பகுதியில் இயக்க நடவடிக்கை செய்வதாக உறுதியளித்ததின் பேரில். போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் மற்றும் கிராமத்தினர் கலைந்து சென்றனர்.