பொன்னேரி, ஜூலை. 27 –
தமிழக எதிர் கட்சி தலைவரும். அதிமுகாவின் தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மின்சாரகட்டணம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சி தொண்டர்களுக்கு விடுத்த ஆணைப்படி, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலையருகே நேற்று வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் பாதாளச் சாக்கடை திட்ட பணிகளில் தொய்வு, மேலும், குடிநீர் வரி உயர்வு கழிவு நீர்கால்வாய்கள் வரி. மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்ட திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி. பலராமன் தலைமை ஏற்க, எல்லாபுரம் ஒன்றிய கழக செயலாளரும் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான விஜயகுமார் மற்றும் கழக அம்மாபேரவை இணை செயலாளர் பொன் .ராஜா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துகுமார். பொன்னேரி நகர கழக செயலாளர் செல்வகுமார். மீஞ்சூர் பேரூர் கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் மாரி மேலும், திரளான மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மற்றும் கிளை அளவிலான அதிமுக கட்சியின் நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.