காஞ்சிபுரம், ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஏராளமான திமுகவினர் அம்பேத்கர் திருவுருவ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரியாதை செலுத்தினர்.

அதன் பின் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாளான இன்று சமத்துவ நாள் என அறிவித்துள்ளோம். அந்நாளில் இன்று திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here